Dec 15, 2011

ஒப்புரவறிதல்-0261


    • அதிகாரம்            : ஒப்புரவறிதல்
    • இயல்                     : இல்லறவியல்
    • பால்                        : அறத்துப்பால்
    • குறள்                      : 261

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்

    சொல் விளக்கம்:
    பயன்மரம்  - பயனுள்ள மரம்
    நயனுடையான் - நல்ல பண்புகள் கொண்டவன்

    பொருள்:
    ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

    விளக்கம்:
    ஊரின் நடுவே ஒரு பெரிய மரம் இருக்கிறது.அதை நட்டு வைத்தவர் யாரென்று தெரியாது.
    அதை பரமாரிக்க யாரும் இல்லை என்றாலும் மரமானது,ஊர் முழுவதுமே தன்னிடம் வந்தாலும்
    நிழல் தரும் அளவுக்கு கிளைகளை வியாபித்திருந்தது.அது ஒரு மாமரம்.
    மக்களுக்கு நிழல் மட்டுமல்லாது காய்,கனிகளையும் கொடுத்தது அந்த மரம்.
    அதனால் அந்தா ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
    இதனைக்கண்டு அந்த மரமும் களிப்போடு செழித்து நின்றது.

    பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணம் கொண்டவன் இந்த பயன் மரத்திற்கு ஒப்பாவான்.
    அவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவனது செல்வம் பயன்படும்.

    No comments:

    Post a Comment