Showing posts with label அறத்துப்பால். Show all posts
Showing posts with label அறத்துப்பால். Show all posts

Dec 19, 2011

வான்சிறப்பு - 0017


  • அதிகாரம்                           : 02- வான்சிறப்பு
  • இயல்                                  : பாயிரவியல்
  • பால்                                     : அறத்துப்பால்
  • குறள்                                   : 0017

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

சொல் விளக்கம்:
தடிந்தெழிலி - மிக கருமையான மேகம்
நல்காதாகி - தராமல் போனால்
பொருள்:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
விளக்கம்:
இந்தக் குறளில், கவிஞர் அருமையான உவமையை மறைபொருளாகக் கூறியிருக்கிறார்.
குறள் கூறும் நேரடி செய்தி யாதெனில், “கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மேகத்திரளாகிறது.அந்தக் கரிய மேகங்கள் தாம் உட்கொண்ட நீரை, மீண்டும் மழையாகப் பொழியாமல் போனால்,
அந்தக் கடலுக்கு நீர் ஆதாரம் இல்லை.அது அளவில் மிகப்பெரியது என்றாலும், வற்றிப் போகும்! " என்பதாகும்.

அதுபோல, மனிதனாகப் பிறந்த நாம், நம் வாழ்வில் சிலருக்கு கடன்பட்டவர் ஆகின்றோம்.நம் சமூகம்,நம்மை தாலாட்டி வளத்த பெற்றோர்,கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் என்ற
அத்தனை பேரின் முயற்சியால் தான் நாம் மேகம் போல உயர்ந்து இருக்கின்றோம்.ஒரு உயர்ந்த நிலையை அடைந்த பிறகு, மேற்கூறிய அனைவருக்கும் பயன்தருமாறு வாழ வேண்டும்.

அதை விடுத்து, நமது சுய வாழ்வே பெரிது என்று நினைத்தால் அது மேகம் மழை பொழியாமல் இருப்பதற்கு சமமாகும்.
நம்மை சார்ந்த கடல் போன்ற அத்தனை பேரும் கைவிடப்பட்டவராவர்.அவர்களது தாழ்வுக்கு நாமே காரணாமாகக் கூடும்.
ஆக, எவ்வளவு உயரம் போனாலும், உதவியவருக்கு நன்றி செய்ய மறக்கக் கூடாது.

நம் இந்தியா இன்னும் வளரும் நாடாகவே இருப்பதற்கும், முந்தைய காலத்தில் கலாச்சார புகழோடு வளர்ந்து உயர்ந்த நாடாக இருந்ததற்கும் இதுவே காரணமாகும்! நாம் முக்கியம். அதைவிட நாடு முக்கியம்!

Dec 15, 2011

ஒப்புரவறிதல்-0261


    • அதிகாரம்            : ஒப்புரவறிதல்
    • இயல்                     : இல்லறவியல்
    • பால்                        : அறத்துப்பால்
    • குறள்                      : 261

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்

    சொல் விளக்கம்:
    பயன்மரம்  - பயனுள்ள மரம்
    நயனுடையான் - நல்ல பண்புகள் கொண்டவன்

    பொருள்:
    ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

    விளக்கம்:
    ஊரின் நடுவே ஒரு பெரிய மரம் இருக்கிறது.அதை நட்டு வைத்தவர் யாரென்று தெரியாது.
    அதை பரமாரிக்க யாரும் இல்லை என்றாலும் மரமானது,ஊர் முழுவதுமே தன்னிடம் வந்தாலும்
    நிழல் தரும் அளவுக்கு கிளைகளை வியாபித்திருந்தது.அது ஒரு மாமரம்.
    மக்களுக்கு நிழல் மட்டுமல்லாது காய்,கனிகளையும் கொடுத்தது அந்த மரம்.
    அதனால் அந்தா ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
    இதனைக்கண்டு அந்த மரமும் களிப்போடு செழித்து நின்றது.

    பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணம் கொண்டவன் இந்த பயன் மரத்திற்கு ஒப்பாவான்.
    அவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவனது செல்வம் பயன்படும்.